"தனத்த தந்தன தனனன தனனன
தனத்த தந்தன தனனன தனனன
தனத்த தந்தன தனனன தனனன - தனதானா
தனத்த தந்தன தனனன தனனன
தனத்த தந்தன தனனன தனனன - தனதானா
நிருத்த னின்தன யனைவடி வழகனை
நிவத்த லுஞ்செய துணைவரு முருகனை
நிரப்பு மன்புட னுளமதி லுருகியு மடிபேண
நினைத்த தும்தரி சனமரு ளிடுவென
நெருக்கு மென்றனி னுளமுறை குருபர
நிலைப்பு டன்திரு மலரடி தொழுதிட வருவாயே
விருத்த முஞ்சொலி வழிபடு மடியவர்
விதிப்பை வென்றிட மயிலுட னடமிடு
விகற்ப மும்பழி விலகிட வகைசெயு மழகோனே !
விபுத்து வந்தனை யறிகில னெனைநனி
விளக்கி நெஞ்சினி லிடமது தருமுனை
வியப்பு டன்துதி செயுமெனை நலமுற அருள்வாயே !
திருக்கு டந்தையி லுறையுமை சிவனொடு
சிறப்பு றும்படி வடிவழ கியகுக
தினைப்பு னந்தனி லுலவிடு குறமக லிணைவோனே !
திளைப்பி லஞ்சன விழியொடு சிலையென
விருப்பு டன்கரி மகளொடு மணமுறு
திருப்ப ரங்கிரி யினிலெழி லுறவரு மயில்வீரா !
வருத்த மும்பட விடுவது மழகிலை
வழுத்தி யுன்றனை வழிபடு மடியரை
வடித்த நெஞ்சொடு வருதுயர் விலகிட அருள்பாலா!
வனப்பு டன்சடை மதியணி பரமனின்
மனத்து றைந்திடு அறுமுக வடிவினை
வணக்க முஞ்செய சகலமு மருளிடு பெருமாளே !
No comments:
Post a Comment