Thursday, November 17, 2016

சிவபெருமான் திருப்புகழ் !



"தனத்த தந்தன தானன தானன 
தனத்த தந்தன தானன தானன 
தனத்த தந்தன தானன தானன. - தனதானா 

அகத்தி லன்புட னேதுதி பாடிட 
அணைக்க வந்திடு வாயெனு மாசையில் 
அழைப்பி லின்பமு மேவரு மேயெனு - முரைகேளாய் ! 

அடைக்க லந்தரு வாயென நாடிட 
அடக்கி யென்றனை யாதறி நீகதி 
அளிப்ப துன்கட னேசிவ னேயிதை - உணராயோ ? 

சுகத்து டன்பரி வோடெனை வாழவை 
துலக்க மிங்கிலை யேகனி வாயொரு 
துடித்த நெஞ்சினி லோடிடு தேசிவ - பெருமானே ! 

துடிப்பு டன்கரு நாகமு மேனியில் 
சுழித்து டம்பினி லாடிட வேமகிழ் 
தொடுக்கு மன்பினி லேபிற வாவர - மருள்வாயே ! 

புகட்ட வந்திடு வாயென நாடிடு 
பொழிப்பு டன்பல காலமு மேதொழு 
பொருட்ப டுந்திரு வாசக மோதிட - மகிழ்வோனே ! 

புலப்ப டும்படி நீறணி மேனியில் 
புறத்தி ருந்தவ ளாமுமை கூடயில் 
பொதுக்கு மன்பிலு லாவரு வேணிய -னருள்கோவே ! 

நகைப்பி லஞ்சிடு வோரினை மாநடன் 
நடித்த மஞ்சுள சோதிய னேநனி 
நயப்பு டன்கிரி மீதினி லேறிடு - முமைகோவே ! 

நனைத்த நஞ்சுணி யேநட ராசனை 
நடத்து மம்பிகை யேயெழி லாளொடு 
நரிப்பு டன்பிறை சூடிய மாமணி - வருவாயே !

No comments:

Post a Comment