Wednesday, November 9, 2016

மழை ....!!!



கருமேகம் சூழ்ந்துவரக் கண்டுமயி லாடத் 
தருக்களெலாம் காற்றிலசைந் தாடத் - திரும்பும் 
குருகுகளும் கூடடையக் கோலமுடன் சொட்டி 
வருமேயிம் மண்ணில் மழை . 
மின்னல் பளிச்சிட வேட்டா யிடியிடிக்க 
சின்னத் துளிகளாய்ச் சேர்ந்துவிழ - முன்னதாய் 
மண்மணத்தில் மெய்சிலிர்க்க  வானவில்லும் பூத்திடக் 
கண்குளிரும் விண்மழை கண்டு.

பூரிப்பாய் வந்திடும் பூமியை முத்தமிட 
ஏரிகுளம் நீர்மட்டம் ஏற்றிடும் - மாரிபோல் 
இன்பந் தரவல்ல(து) ஏதுமுண்டோ? இவ்வுலகின் 
துன்ப மகற்றும் துணை .

No comments:

Post a Comment