தவழும் மழலையைத் தாயவள் கண்டால்
கவலை பறந்திடும் காற்றிலே! தேனாய்
உவகைப் பெருகிட உள்ளமும் சொக்கிப்
பவனி வருபவள் பார் .
விழிகள் விரிந்திட விந்தையாய்ப் பார்க்கும்
மொழிக லறிந்திடா மொட்டெனப் பூக்கும்
அழகாய்த் தவழ்கையில் அம்புலி தோற்கும்
மழலை நலமுற வாழ்த்து .
No comments:
Post a Comment