Wednesday, November 9, 2016

மழலை இன்பம் ....!!!



தவழும் மழலையைத் தாயவள் கண்டால் 
கவலை பறந்திடும் காற்றிலே! தேனாய்  
உவகைப் பெருகிட உள்ளமும் சொக்கிப்
பவனி வருபவள் பார் .

விழிகள் விரிந்திட விந்தையாய்ப் பார்க்கும் 
மொழிக லறிந்திடா மொட்டெனப் பூக்கும் 
அழகாய்த் தவழ்கையில் அம்புலி தோற்கும் 
மழலை நலமுற வாழ்த்து .   

No comments:

Post a Comment