Thursday, November 17, 2016

செவிகுளிர்ந்தேன் நானே ...!!!

தேன்சொட்டும் மலரினிலே தேன்சிட்டுத் தேனைத் 
***தேடிவந்து தித்திக்கும் தேனமுதை உண்டு 
தேனுண்டக் களிப்பினிலே தேன்சிட்டும் தூங்க 
***தேன்பூவை முத்தமிட்டுத் தேன்வண்டும் கொஞ்ச 
தேனூறும் காட்சியிலே தேன்மொழியாள் சொக்க 
***தேன்கவிதை ஊற்றெடுத்துத் தேனாறாய்ப் பாய 
தேன்தமிழைச் சோலையிலே தேவதைநீ பாட 
***திருவாச கத்தேன்போல் செவிகுளிர்ந்தேன் நானே !!

No comments:

Post a Comment