Saturday, April 11, 2020

வண்ணப் பாடல் ...!!!

வண்ணப் பாடல் ...!!!
*****************************
தந்தனன தத்தனன
தந்தனன தத்தனன
தந்தனன தத்தனன தனனானா (அரையடிக்கு )
கொஞ்சிவரு நற்றமிழில்
உந்திவரு சொற்களொடு
கொண்டலென முத்தையனும் பொழிவீரே
குந்தனிடம் பற்றுடைய
அந்தமிழன் நெற்றியணி
குங்குமமும் பட்டுடையி லழகோனே !
நெஞ்சமதில் நித்தமொரு
சந்தமழை முத்துதிர
நின்றபடி நற்பனுவல் வனைவீரே !
நின்றமிழ்ம யக்கிவிடு
மெந்துயர றுத்துவிடும்
நின்புகழு மிப்புவியில் நிலைதானே !
வஞ்சமற சொற்பதமும்
பஞ்சமற கற்பனையும்
வந்துலவும் பட்டுவிரல் வழியாக !
வண்டமிழு மற்புதனை
யின்புடன ணைத்துநிதம்
மன்றினில்ம ணக்கவர மருள்வாளே !
அஞ்சனம ழித்திடுமுன்
நெஞ்சுலவு தத்துவமு
மஞ்சலென வெற்றியினை யருளாதோ ?
அன்புமிகு செட்டிமக
னுன்கவிப டிப்பவர்க
ளந்திபக லெப்பொழுதும் மகிழ்வாரே !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment