Tuesday, April 28, 2020

வண்ணப் பாடல் ...நன்றி ...!!!

தந்த தான தந்த தான
தந்த தான தந்தானா ( அரையடிக்கு )
நன்றி யோடு கந்த வேளை
நம்பி நானு மன்போடே !
நன்கு பாட நெஞ்சில் நாளும்
நங்கை யாசை கொண்டேனே !
தென்ற லாக வந்த தோடு
சிந்தை மேவி நின்றாயே!
சிம்பி யாடு சந்தம் நூறு
செந்தில் நாத தந்தாயே !
இன்ப வானில் மஞ்சு போல
வின்று மோடு கின்றேனே !
எந்த வேளை யென்ற போது
மென்ற நாவில் வந்தாடே !
மன்றில் நீல கண்ட னாரின்
மைந்த னேபு கழ்ந்தேனே !
வண்டு தேனை யுண்டு பாடும்
மங்கை யாய்ம கிழ்ந்தேனே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment