Saturday, April 11, 2020

வண்ணப் பாடல் ...!!!


தத்தத் தானத் தனதானா
தத்தத் தானத் தனதானா
தொட்டுப் பேசித் திரியாதே
தொற்றுத் தொற்றிப் படுவாயே !
நட்பைத் தேடிச் செலும்போதும்
நச்சுத் தாவிப் பெருகாதோ ?
கட்டுக் காவற் படையோடே !
கற்பிப் போருக் குதவாயோ ?
பட்டுப் போகத் துணிவாயோ
பற்றற் றானைப் பணிவாயே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment