Thursday, April 16, 2020

வண்ணப்பாடல்...!!! காதல்


தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த தனத்தனதா ( அரையடிக்கு)
அவளொடு கொண்ட வுறவினி லின்ப
மமுதென வின்று மினிக்கிறதே
அகமதை வென்ற நடமிடு மன்பி
னடைமழை நெஞ்சை நனைக்கிறதே!
உவகையி லொன்றி யிதயம யங்கி
உயிரென நம்பி யிசைக்கிறதே
உரிமையில் வந்த விணையுட னிந்த
உலகை மறந்து துடிக்கிறதே!
கவிதைவ னைந்த கயல்விழி கண்டு
கவலைம றந்து சிரிக்கிறதே
கலைமதி கண்டு கனிமொழி யென்று
கனவில்மி தந்து களிக்கிறதே!
சுவையையு ணர்ந்து பரிவுக லந்து
சொரியுப தங்க ளணைக்கிறதே!
துணிவொடு நின்று துயரையும் வென்ற
துணையவ ளன்பு நிலைத்திடுமே!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment