Thursday, April 16, 2020

வண்ணப் பாடல் ...!!!

வண்ணப் பாடல் ..!!!
***************************
தனத்தத் தனந்த தனதன 
தனத்தத் தனந்த தனதன 
தனத்தத் தனந்த தனதன     தனதானா ( அரையடிக்கு )

பசிக்குக் குழந்தை யழுதிட 
வணைத்துப் பரிந்து மகிழ்வொடு
படுத்துக் கிடந்த வனையவ       ளெழுவாளே

பயத்துச் சுரந்த வமுதினை 
யளித்துக் கனிந்த மனமது
பரத்திக் குளிர்ந்து மகவொடு   துயிலாதோ ?

இசைத்துப் பணிந்த வெளியனை 
விரட்டித் தொடர்ந்த வினைகளை 
எதிர்த்துத் துணிந்து களையெடு     மயில்வீரா !

இடர்க்குப் பயந்த பிளையெனை
எடுத்துச் சுமந்து வருடியெ
னிளைப்பைப் புரிந்து தயவுசெய்    யொருதாயாய் !

அசைத்துப் பிழிந்த துயர்களை 
மடக்கிச் சிறந்த முறையினி
லடக்கத் தெளிந்த வறிவினை     யருள்வாயே !

அணைப்பிற் கசிந்த விழியொடு
திருப்பொற் பதங்க ளழகினை
யடுக்கிப் புகழ்ந்து தொழுதிட      வருவாயே !

வசித்தற் குகந்த விடமென
விளக்கிற் படர்ந்த வொளியொடு
மனத்தை திறந்து பரவெளி      விடுவாயே !

மயக்கிக் கவர்ந்த குறமக
ளகத்திற் பொழிந்த மழையென 
வரித்துச் சிவந்து நடமிடு      பெருமாளே !

சியாமளா ராஜசேகர் 










No comments:

Post a Comment