தனன தான தனதான
தனன தான தனதான
தனன தான தனதான தனதானா ( அரையடிக்கு )
படிக ளேறி மலைமீது
கவலை யோடு வரும்போது
பழனி பால கனைநாடு மனமேநீ !
பரம ஞான மருள்வானை
யுருகு மாறு கனிவோடு
பணிய வேம யிலிலேறி வருவானே !
கொடியு மாட வரவாட
விடைய றாத வளியோடு
குழலு மாட மலராடு மழகோடே !
குருகு மாட மரமாட
மணியு மாடு மொலியோடு
குமர னாட வடிவேலும் நடமாடி !
அடிய ரோடு துணையாக
மழலை போலு மொழிபேசி
யருள வோடி யுறவாட விழைவானே !
அழகு நாவல் மரமீது
கிழவி யோடு கதைபேச
அருவி யாக வுளமாடி நனையாதோ !
முடிவி லாத துயரோடு
மனமும் வாடி யலையாது
முருக னேயு னருளாசி பொழியாயோ !
முதுமை நோயி லுழலாம
லுனது பாத மலராக
முறுவ லோடு கரைசேர அருள்வாயே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment