Saturday, April 11, 2020

இனிய சந்தம் பொங்குதே ....!!!

காற்று வந்து காத லோடு
காதை யுரசும் போதிலே
நாற்று மாடு மழகில் மலரும்
நல்ல கவிதை நாவிலே
ஆற்று வெள்ளம் பெருகி யோட
அலைக ளெல்லா மாடுதே
ஊற்றெ டுக்கு மன்பி லின்ப
உறவி னிக்கும் நாளுமே !!
பூவில் வண்டு மதுவை யுண்டு
பொய்யு றக்கம் போடுதே
காவல் மீறி மானி ரண்டு
காத லுறவு கொள்ளுதே
தூவி மழைந னைத்த போது
தோகை மயிலு மாடுதே
நீவு கின்ற தென்ற லோடு
நெஞ்சம் மகிழ்வி லோடுதே!!
அந்தி மாலை மொட்ட விழ்ந்த
அழகு மலர்ம ணக்குதே !
அந்தி வான்சி வந்த காட்சி
அமைதி யாய்ம யக்குதே!
முந்தி வந்த பஞ்சு மேகம்
மூட வெயில்ம றைந்ததே!
இந்த விந்தை காணும் போது
இனிய சந்தம் பொங்குதே!!
( எழுசீர்ச் சந்த விருத்தம் )
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment