Tuesday, April 28, 2020

கடவுள் வாழ்த்து ...வண்ணப் பாடல் ...!!!

தனதனன தன்னதன தனதானா
தனதனன தன்னதன தனதானா
விரலசைவில் வண்ணமது விளையாட
விழையுமென தெண்ணமது நிறைவேற
அருணைமுனி நன்மையினை யருளாயோ
அறுகணியும் முன்னவனி னருளாலே
கரிமுகனை யெண்ணிநிதம் பணிவேனே
கவியமுது கன்னலென வழியாதோ
குருபரனி னண்ணனுனை நினைவேனே
குமரனொடு பொன்மயிலில் வருவாயே !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment