தனதனன தன்னதன தனதானா
தனதனன தன்னதன தனதானா
விரலசைவில் வண்ணமது விளையாட
விழையுமென தெண்ணமது நிறைவேற
அருணைமுனி நன்மையினை யருளாயோ
அறுகணியும் முன்னவனி னருளாலே
கரிமுகனை யெண்ணிநிதம் பணிவேனே
கவியமுது கன்னலென வழியாதோ
குருபரனி னண்ணனுனை நினைவேனே
குமரனொடு பொன்மயிலில் வருவாயே !
No comments:
Post a Comment