Saturday, April 11, 2020

வண்ணப் பாடல் ...!!!

Image may contain: 1 person

தந்த தந்த தான தந்த
தந்த தந்த தான தந்த
தந்த தந்த தான தந்த தனதானா
கொஞ்சு கின்ற வான ரங்கள்
இன்பம் பொங்க வேம கிழ்ந்து
குந்தி யன்பி லேம யங்கி மரமீதே
குன்ற மெங்கு மேறி வந்து
வண்டி ருந்த வாழை யுண்டு
கொம்பி லும்ப லாக னிந்து தரைவீழ
அஞ்சி நின்ற தோசு ருண்டு
மந்தி சென்ற தோத வழ்ந்து
மங்கு மிங்கு மாக வம்பு செயும்போதே
அந்தி வந்து சாய வுஞ்சி
வந்த மஞ்சு வானில் முந்த
அன்பு ளங்க ளோடு தென்ற லுறவாடும்
இஞ்சி மஞ்ச ளோடு குங்கு
மம்க லந்த வாச மெங்கு
மென்ற நெஞ்சி லேக னிந்து களிகூடும்
என்று மொன்ற வேநி னைந்து
சந்த தம்சி வாய வென்றெ
னெந்தை நம்பி நீறணிந்து புகழ்பாட
நஞ்சை யுண்ட வீசன் மன்றி
லன்ப னென்று தானு ணர்ந்து
நந்தி யொன்றின் மீத மர்ந்து வரும்போது
நண்ப னென்று தோள ணைந்து
சம்பு வின்மு னேப ணிந்து
நன்றி பொங்க வேக ரைந்து விடுவேனே!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment