Sunday, April 19, 2020

நீலவானோடையில்....!!!

நேரிசைப் பஃறொடை வெண்பா...!!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
நீலவா னோடையில் நித்தம் வளையவந்து
கோலவெழில் காட்டிக் குளிர்விக்கும் - ஞாலமும்
கண்டு வியந்து கவிமலரால் போற்றிடும்
எண்ணிலா மீன்கள் இணைந்தாடும் - கண்சிமிட்டிப்
புன்னகைக்கத் தானும் பொலிவாய்ச் சிரித்தொளிரும்
பொன்முக மும்புதைந்து பூரிக்கும் - மென்முகிலுள்
கொஞ்சியுற வாடிக் குறும்புசெயும் - வஞ்சியென்
நெஞ்சை வருடும் நிலவு.

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment