Thursday, April 23, 2020

வண்ணப் பாடல் ....!!!( காதல் )



தனன தந்த தனன தந்த
தனன தந்த தனதான ( அரையடிக்கு )
கனியு மன்பி லுருகி நெஞ்சு
கவலை யின்றி உழலாதோ
கடுகி வந்த வினைய கன்று
கனவு கண்டு மகிழாதோ
உனைநி னைந்து கவிவ னைந்த
உறவி லின்பம் பெருகாதோ
உளறு கின்ற மொழியி லென்று
முனது கொஞ்ச லறிவேனே
தனிமை வென்று படிய டைந்து
சரண மென்று பணிவேனே
தயைபு ரிந்து விழிதி றந்து
தழுவ வந்தி மறையாதோ
இனிவி ரும்பி யுயிர்க லந்த
இதழ்க ளுண்டு மகிழ்வேனே
இடைமெ லிந்த வழகு மங்கை
இசையி லொன்றி நனைவேனே !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment