Tuesday, April 28, 2020

வண்ணப் பாடல் ...!!!

Image may contain: 1 person, sitting

தன்ன தந்த தந்த தனன
தன்ன தந்த தனதானா (அரையடிக்கு)
கண்ண னுன்ற னின்ப நினைவு
கண்ணி லன்பை விதையாதோ
கன்னி யின்று கண்ட கனவு
கண்ம லர்ந்து விரியாதோ
எண்ணு கின்ற நெஞ்சி லமுத
மின்னும் பொங்கி வழியாதோ
இன்மு கங்கு ளிர்ந்த பொழுதி
லின்ன லஞ்சி விலகாதோ
நண்ணி வந்து கொஞ்சி மகிழ
நன்மை யும்பெ ருகிடாதோ
நம்மை விஞ்ச வெந்த உறவு
நன்னி லங்க ருதிடாதோ
வண்ண மென்ற சந்த மழையில்
மன்ன னொன்றி நனையாயோ
மண்ணி லென்று முன்ற னுளமும்
வண்மை கொண்டு திகழாதோ?
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment