Sunday, November 5, 2017

உதித்தது கவிதை !


சிவந்திடும் இருண்ட வானில்  
***சித்திரம் தீட்டி னாற்போல் 
தவழ்முகில் அலைகள் மேலே 
***தகதக வென்றே பொன்னாய்க் 
கவின்மிகு கதிரோன் மின்னும் 
***காட்சியைக் கண்ட போழ்தில் 
உவகையில் உள்ளம் பூக்க 
***உதித்தது கவிதை நன்றே !!

No comments:

Post a Comment