Friday, November 24, 2017

அன்பின் சின்னம் ....!!!



எழில்கொஞ்சும் அதிசயங்கள் ஏழுள் ஒன்றாய்
***யமுனைநதிக் கரையினிலே வியக்கும் வண்ணம்
அழிவில்லாக் காதலுக்கு சாட்சி யாக
***அகிலத்தில் சிறப்புமிக்க அன்பின் சின்னம்!
பொழிந்தவன்பின் ஆலயமாய்க் கட்டப் பட்ட
***புனிதமான கலைக்கூடம் இஃதே யன்றோ?
விழிவிரிய வைத்திடுமே வேலைப் பாடு
***வெண்பளிங்கு மாளிகைக்கிங் கில்லை யீடே!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment