Monday, November 27, 2017

கதைபேசும் கண்கள் ....!!!

கதைபேசும் கண்களிலே காதல் ஏக்கம் 
      கனிவான பார்வையிலே அகமும் பூக்கும் !
இதயத்தின் ஓசைதனை விழிகள் மீட்டும் 
     இமைமூடி யிருந்தாலும் இதமாய்க் காட்டும் !
முதலாக எண்ணத்தை எடுத்துச் சொல்லும் 
     மொழியின்றி மௌனத்தால் மனத்தை வெல்லும் !
வதனத்திற் கழகூட்டி வசியம் செய்யும் 
     மையிட்ட கண்ணிரண்டும் நெஞ்சைக் கொய்தே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment