Thursday, November 16, 2017

உள்ளமும் நீந்தும்


கரைபுரண் டோடும் காவிரி யாற்றில் 
***கயலுடன் உள்ளமும்  நீந்தும் !
நுரையுடன் அலைகள் மேனியைத் தழுவ 
***நொடியினில் இதயமும் பூக்கும் !
இரைச்சலும் கூட  இருசெவி களிலும் 
***இன்னிசை யாகவே கேட்கும் !
விரைத்திடும் வரையில் நதியினி லாட 
***விழைந்திடும் ஆசையி னாலே !

சியாமளா ராஜசேகர்  

No comments:

Post a Comment