Thursday, November 16, 2017

சிறக்கும் விவசாயம் ....!!


ஏர்பிடிக்கும் கைகளின்று வேலை யின்றி 
***ஏங்கிநிற்கும் அவலநிலை மண்ணில் கண்டோம் !
கார்பொய்த்த  காரணத்தால் பயிர்கள் வாட
***கண்ணீரில் அவர்பிழைப்பும் நசியக் கண்டோம் !
நேர்மையுடன் நம்மரசும் கவனத் தோடு
***நீதியினைத் தக்கபடி வழங்கி விட்டால் 
தீர்வின்றித் தடுமாறும் நிலையும் மாறிச் 
***சீர்பெற்றே விவசாயம் சிறக்கும் நன்றே !  

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment