வரமே !
பனிமலை கண்ட பரவசத் தாலே
***பனித்திடும் விழிகளும் விரியும்!
நனியழ கோடு நிமிர்ந்தநற் கோலம்
*** நனைத்திட மனமதும் மயங்கும்!
புனிதமாய்த் தோன்றி விடியலின் ஒளியில்
***பொன்னிற மாயது மின்னச்
செனித்திடும் அமைதி அகத்தினில் நிறையச்
***சிலிர்த்திட வைத்திடும் வரமே!
No comments:
Post a Comment