Thursday, November 16, 2017

அந்திசாயும் வேளையிலே

அந்திசாயும் வேளையிலே பொன்மஞ்சள் வானில்
***அழகாகச் செங்கதிரும் விடைபெற்றுச் செல்ல
முந்திவரும் முகிலினங்கள் ஓவியமாய்த் தோன்ற

***மோகனமாய் முகங்காட்டும் வெண்ணிலவின் வரவில்
செந்தூர வண்ணத்தில் கவின்மலர்கள் வாசம்
***தென்றலிலே கலந்துவந்து மேனியினைத் தழுவச்
சிந்துகின்ற சாரலிலே சிற்றோடைக் கரையில்
***சிலிர்க்கவைத்த அமைதியிலே மகிழ்ந்ததென்றன் நெஞ்சே!

No comments:

Post a Comment