Thursday, November 16, 2017

உணர்வீர் நன்றே !!

பூட்டிவைத்த பொன்பொருளும் நிலைப்பதில்லை என்பதனைப் 
***புரிந்து கொண்டால் 
ஆட்டிவைக்கும் அகம்பாவம் விட்டகன்றே உள்ளத்தில் 
***அமைதி பூக்கும் !
மீட்டெடுக்க இயன்றிடுமோ இழந்துவிட்ட இளமைதனை 
***மெய்யாய்ச் சொல்வீர் !
ஊட்டியூட்டி வளர்த்திடினும் யாக்கைக்கும் அழிவுண்டென்(று)
***உணர்வீர் நன்றே !! 

No comments:

Post a Comment