Monday, November 20, 2017

இமயம் கண்டேன் ....!!!


உறைபனிக்குள் உடல்மறைத்து  நிமிர்ந்திருக்கும் அரணாய்
***உதயகாலைப் பொழுதினிலே ஒளிர்ந்திருக்கும் பொன்னாய் !
நிறைந்திருக்கும் நீரோடை வழிநெடுகில் எங்கும் 
***நெடுமரங்கள் விண்முட்ட வளர்ந்திருக்கும் எழிலாய் !
மறைத்துவிடும் உச்சிதனை முகிலினங்கள் தவழ்ந்து 
***மகிழ்ச்சியுடன் உறவாடிக் கடந்துசெலும்  மிதந்து !
இறையவனின் உறைவிடமாய்த்  திகழ்ந்திருக்கும் இமயம் 
***இயற்கைநமக் களித்திட்ட பெருங்கொடைதா னன்றோ  ??

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment