மலைச்சாலை வழியெங்கும் சிற்றருவி கொட்டும்
****மகிழுந்தில் மலைப்பயணம் மனமகிழச் செய்யும் !
அலையலையாய் மேகங்கள் உடலுரசிச் செல்லும்
****அழகழகாய் உறைபனியும் உள்ளத்தை வெல்லும் !
குலைநடுக்கு மேயதல பாதாள பள்ளம்
****குண்டுகுழிச் சாலைகளில் பெருகியோடும் வெள்ளம் !
தொலைத்துவிட்டேன் என்னிதயம் இயற்கையிடம் தஞ்சம்
****தொலைதூர மிருந்தாலும் நினைவுகளைச் சுமந்தே !!
No comments:
Post a Comment