Thursday, November 16, 2017

புலவோரே பாடும் ...!!!


குடும்பமுடன் கூடிவாழும் குரங்கினத்தைக் காணீர் 
***கொஞ்சுதமிழ்ச் சொல்லெடுத்துப் புலவோரே பாடீர் !
தடுமாற்ற மில்லாமல் கிளைகளிலே தாவும் 
***தன்னோடு குட்டியையும் சுமந்துகொண்டு போகும் !
படுவேக மாகவது மலைமீதி லேறும் 
***பழந்தின்று பசியாறிக் களிப்பினிலே ஆடும் !
வெடுக்கென்று கைப்பொருளைப் பறித்துக்கொண் டோடும்
***விரட்டிவிட்டால்  முறைத்தவண்ணம் பார்த்திருக்கும் நின்றே !! 

No comments:

Post a Comment