குடும்பமுடன் கூடிவாழும் குரங்கினத்தைக் காணீர்
***கொஞ்சுதமிழ்ச் சொல்லெடுத்துப் புலவோரே பாடீர் !
தடுமாற்ற மில்லாமல் கிளைகளிலே தாவும்
***தன்னோடு குட்டியையும் சுமந்துகொண்டு போகும் !
படுவேக மாகவது மலைமீதி லேறும்
***பழந்தின்று பசியாறிக் களிப்பினிலே ஆடும் !
வெடுக்கென்று கைப்பொருளைப் பறித்துக்கொண் டோடும்
***விரட்டிவிட்டால் முறைத்தவண்ணம் பார்த்திருக்கும் நின்றே !!
No comments:
Post a Comment