Thursday, November 16, 2017

கொஞ்சிடத் தூண்டிடுதே ....!!!


குழந்தையின் முகத்தில் குழிவிழும் கன்னம் 
***கொஞ்சிடத் தூண்டிடுதே !
நிழல்தரும்  மரமாய் நெஞ்சமும் குளிர்ந்து 
***நிம்மதி தோன்றிடுதே !
அழகிய மலரின் அற்புத மணமாய்
***அகத்தினை நிறைத்திடுதே !
மழலையின் மொழியோ மனத்தினை மயக்கி 
***மகிழ்வுறச் செய்திடுதே !

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment