கண்ணனைச் சுற்றியிளங் கன்னியர் வீற்றிருக்க
வெண்ணிலவு வெள்ளொளியில் வேணுகா னம்பிறக்க
பண்ணிசையில் அன்னங்கள் பக்கத்தில் வந்துநிற்க
விண்சூழும் மேகம் விரைந்து
கண்ணாடிக் கைவளையல் காற்றில் கலந்தாட
அண்ணார்ந்துப் பார்த்திட்ட ஆம்பலும் பூத்திருக்க
கண்டோமே காட்சிதனைக் கண்குளிரச் சித்திரத்தில்
மண்ணுண்டோன் லீலை வனப்பு .
எழில், சித்திரத்தில்!
ReplyDeleteஎழில், அதை வரியில் வடிவாக்கிய இன்சுவை வெண்பாவில்!!
பொருந்தும் கவியிந்த வனந்தனில் பொக்கிஷம்!!! :)