Friday, August 7, 2015

தங்க ரதத்திலே நீவருவாய் ....!!! ( முருகன் பக்திப் பாடல் )





                                              பல்லவி 
                                             `````````````
மலையேறி வரும்போது மயிலகவு தய்யா 
மயிலகவும் ஒலிகேட்டு மனம்சிலிர்க்கு தய்யா

                                             அனுபல்லவி 
                                           `````````````````````
ஓங்கார ஓசையிலே உயிருருகு தய்யா 
ஆங்கார மகன்றோடி அகமகிழு தய்யா 
ஏங்குகின்றேன் அடிபணிந்து இதமளிப்பா யய்யா 
பாங்குடனே நீயாடி வரவேணு மய்யா !           ( மலையேறி )  

                                              சரணம் 
                                             `````````````
சந்தம் கொஞ்சிட சலங்கை குலுங்கிட 
***சக்தி மைந்தனே நீவருவாய் !
செந்தூர் வேலவ திருவாய் மலர்ந்திட 
***சேவற் கொடியுடன் நீவருவாய் !
கந்த வேளுனைக் கனிவாய்த் தொழுதிட 
***கண்கள் பனித்திடும் நீவருவாய் ! 
வந்த வேதனை வருத்தம் தொலைத்திட 
***வண்ண மயிலிலே நீவருவாய் !             ( மலையேறி )

மாயை நீங்கிட மனமும் தெளிந்திட 
***மாலின் மருகனே நீவருவாய் !
நோயை விரட்டிட நொசிதல் விலக்கிட
***நோக்கம் எழிலுற நீவருவாய் !
தாயைப் போற்றியே தடங்கல் தவிர்த்திட 
***தங்க ரதத்திலே நீவருவாய் ! 
சேயை அணைத்திட செதுக்கும் அழகுடன் 
***சிந்தை குளிர்ந்திட நீவருவாய் !                 ( மலையேறி )

No comments:

Post a Comment