Monday, August 17, 2015

மும்மண்டில வெண்பா - ( 4 )




செவ்விதழ் முத்தத்தில் செங்கரும்பின் இன்சுவையும் 
கொவ்வையின் தித்திப்பும் மங்கிடும் - அவ்விதமே 
பித்தாக்கும் பொங்கிவரும் புன்சிரிப்பும் நெஞ்சள்ளும் 
புத்தழகில் அங்கமெங்கும் பொன் . 

முத்தத்தில் செங்கரும்பின் இன்சுவையும் கொவ்வையின் 
தித்திப்பும் மங்கிடும் அவ்விதமே -பித்தாக்கும் 
பொங்கிவரும் புன்சிரிப்பும் நெஞ்சள்ளும் புத்தழகில் 
அங்கமெங்கும் பொன்செவ்வி தழ் . 

செங்கரும்பின் இன்சுவையும் கொவ்வையின் தித்திப்பும் 
மங்கிடும் அவ்விதமே பித்தாக்கும் -பொங்கிவரும் 
புன்சிரிப்பும் நெஞ்சள்ளும் புத்தழகில் அங்கமெங்கும் 
பொன்செவ்வி தழ்முத்தத் தில் 

இலக்கண விளக்கம் 
```````````````````````````````` 
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!


No comments:

Post a Comment