Wednesday, August 5, 2015

அலை தவழும் ஆழியிலே ....!!!



அலைதவழும் ஆழியிலே 
குலைநடுக்கும் குளிரினிலும் 
உலைகொதிக்க வேண்டுமெனில் 
தொலைதூரம் படகில்போய் 
வலைவீசி மீன்பிடித்து 
கலையாத கனவோடு 
விலைபோகு மென்றுநம்பும் 
நிலைதானே நித்தமுமே …!!

No comments:

Post a Comment