Wednesday, August 12, 2015

மும்மண்டில வெண்பா !

பூச்செண்டு நான்தந்தேன் பொன்மகளே நாயகியே 
பாச்சரமும் யான்தொடுத்தேன் பன்னசியே ! - பேச்சினிலே 
தேன்குழைத்தே இன்னமுதம் சீண்டிநீ தந்திடுவாய் 
மான்விழியே தென்றலெனத் தீண்டு . 

நான்தந்தேன் பொன்மகளே நாயகியே பாச்சரமும் 
யான்தொடுத்தேன் பன்னசியே பேச்சினிலே - தேன்குழைத்தே 
இன்னமுதம் சீண்டிநீ தந்திடுவாய் மான்விழியே 
தென்றலெனத் தீண்டு,பூச் செண்டு . 

பொன்மகளே நாயகியே பாச்சரமும் யான்தொடுத்தேன் 
பன்னசியே பேச்சினிலே தேன்குழைத்தே -இன்னமுதம் 
சீண்டிநீ தந்திடுவாய் மான்விழியே தென்றலெனத் 
தீண்டு,பூச் செண்டுநான்தந் தேன் . 

இலக்கண விளக்கம் 
```````````````````````````````` 
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!

No comments:

Post a Comment