Friday, August 14, 2015

மும்மண்டில வெண்பா -3




மன்றாடு மண்டியிட்டு மன்றாடி மைந்தனைக் 
குன்றாமல் கொண்டாடு குன்றாடும் கோமானை 
வண்ணமுற தென்றமிழில் வாய்விட்டுப் பாடுநெஞ்சே 
கண்பனிக்க அன்புசெய்கு வாய் . 

மண்டியிட்டு மன்றாடி மைந்தனைக் குன்றாமல் 
கொண்டாடு, குன்றாடும் கோமானை வண்ணமுற 
தென்றமிழில் வாய்விட்டுப் பாடுநெஞ்சே கண்பனிக்க 
அன்புசெய்கு வாய்,மன்றா டு . 

மன்றாடி மைந்தனைக் குன்றாமல் கொண்டாடு 
குன்றாடும் கோமானை வண்ணமுற தென்றமிழில் 
வாய்விட்டுப் பாடுநெஞ்சே கண்பனிக்க அன்புசெய்கு 
வாய்,மன்றா(டு) மண்டியிட் டு . 

No comments:

Post a Comment