Thursday, August 6, 2015

கலந்தாடி மகிழ்ந்தனனே ....!!







இளந்தென்றல் இதமளிக்க எழில்மேகம் திரண்டிருக்க
வளங்கொழிக்கும் நதிக்கரையில் வண்ணமயில் பார்த்திருக்க
உளம்மகிழ ராதையவள் ஒயிலாக நடனமிட 
களங்கமில்லாக் கண்ணனுமே கலந்தாடி மகிழ்ந்தனனே ! 

கார்கூந்தல் சுழன்றாட கைவளையும் சேர்ந்தாட 
மார்தவழும் ஆரமுடன் மயிலிறகும் மகிழ்ந்தாட 
நேர்வகிடின் உச்சியிலே நெற்றிச்சுட் டியுமாட 
சோர்வின்றி இருவரையும் சொக்கவைக்கும் நாட்டியமே !


No comments:

Post a Comment