இளந்தென்றல் இதமளிக்க எழில்மேகம் திரண்டிருக்க
வளங்கொழிக்கும் நதிக்கரையில் வண்ணமயில் பார்த்திருக்க
உளம்மகிழ ராதையவள் ஒயிலாக நடனமிட
களங்கமில்லாக் கண்ணனுமே கலந்தாடி மகிழ்ந்தனனே !
கார்கூந்தல் சுழன்றாட கைவளையும் சேர்ந்தாட
மார்தவழும் ஆரமுடன் மயிலிறகும் மகிழ்ந்தாட
நேர்வகிடின் உச்சியிலே நெற்றிச்சுட் டியுமாட
சோர்வின்றி இருவரையும் சொக்கவைக்கும் நாட்டியமே !
No comments:
Post a Comment