விண்ணில் உலவும் மேகம் கண்டால்
மண்ணில் என்மனம் மகிழ்ந்து துள்ளுமே !
வண்ண நிலவின் வனப்பில் இதயமும்
செண்டாய்ப் பூத்திட தேன்மழை சிந்துதே !
கண்ணில் கண்ட காட்சிகள் யாவும்
வண்ணக் கனவாய் மனதில் உதிக்குதே !
பண்ணுடன் பாவும் பைந்தமிழ்ச் சோலையில்
வெண்செந் துறையாய் மிளிர்ந்து மணக்குதே !
No comments:
Post a Comment