Tuesday, August 25, 2015

மிளிர்ந்து மணக்குதே ....!!



விண்ணில் உலவும் மேகம் கண்டால் 
மண்ணில் என்மனம் மகிழ்ந்து துள்ளுமே !

வண்ண நிலவின் வனப்பில் இதயமும் 
செண்டாய்ப் பூத்திட தேன்மழை சிந்துதே !
 
கண்ணில் கண்ட காட்சிகள் யாவும் 
வண்ணக் கனவாய் மனதில் உதிக்குதே !
 
பண்ணுடன் பாவும் பைந்தமிழ்ச் சோலையில் 
வெண்செந் துறையாய் மிளிர்ந்து  மணக்குதே !
 

No comments:

Post a Comment