Saturday, August 8, 2015

ஏக்கமோ ....???




ஏக்கமோ சோகமோ ஏகாந்தம் ஏனென்று 
சீக்கிரம் கூறினால் தேற்றுவேன் ! - போக்கிடம் 
இல்லையோ? சொந்தமும் ஏற்க மறுத்ததோ 
சொல்லிடு தீர்ப்பேன் துயர் .

வண்டலூர் வந்தால் வருத்தமெலாம் மாறிடும்
எண்ணற்ற நண்பர் இருப்பரிங்கே ! - மண்புகும்
நாள்வரையில் வாழலாம் ஞாலத்தில் இன்பமாய் 
தோள்கொடுத்துத் தாங்குவர் சூழ்ந்து .

No comments:

Post a Comment