Friday, August 14, 2015

மும்மண்டில வெண்பா - 2



கற்கண்டுச் சொல்லாலே கண்ணனையே சொக்கவைப்பேன் 
சிற்றடியை மெல்லவந்துச் செண்ணுவேன் - பற்றிடுவேன் 
செல்லமாய் வெண்ணையுண்டோன் தீங்கனிச் செவ்விதழை 
தல்லைநான் மண்டியிட்டேன் தாங்கு . 

சொல்லாலே கண்ணனையே சொக்கவைப்பேன் சிற்றடியை 
மெல்லவந்துச் செண்ணுவேன் பற்றிடுவேன் - செல்லமாய் 
வெண்ணையுண்டோன் தீங்கனிச் செவ்விதழை தல்லைநான் 
மண்டியிட்டேன் தாங்குக(ற்) கண்டு . 

கண்ணனையே சொக்கவைப்பேன் சிற்றடியை மெல்லவந்து 
செண்ணுவேன் பற்றிடுவேன் செல்லமாய்- வெண்ணையுண்டோன் 
தீங்கனிச் செவ்விதழை தல்லைநான் மண்டியிட்டேன் 
தாங்குகற்கண் டுச்சொல்லா லே . 


( செண்ணுதல் - அலங்கரித்தல் 
தல்லை - இளம் பெண் ) 


இலக்கண விளக்கம் 
```````````````````````````````` 
மும்மண்டில வெண்பா என்பது அப்பாடலின் இரண்டாம் மூன்றாம் சீர்களை முதல் சீராக வைத்து வெண்பாவை மாற்றி எழுதினாலும் வெண்பா இலக்கணம் கெடாமல் இருக்கும் செய்யுள்!

No comments:

Post a Comment