Thursday, July 4, 2019

வண்ணப் பாடல் ...!!!

வண்ணப் பாடல் !!
*************************
சந்தக்குழிப்பு 
*******************
தத்தன தனதன 
தத்தன தனதன 
தத்தன தனதன  . . .தனதானா

சிட்டவ ளனுதின மச்சுத னருளொடு
     செப்பிடு மொருகவி      யுணராயோ?
சிற்றிடை வருடிடு நித்தில வணியொடு
     சித்திர மெழுதிய       ததுபோலே !
பட்டுடை யணிபவ ளற்புத வறிவொடு 
     பத்தினி யவள்மொழி      இசையாகும் !
பட்டென வொளிர்பவள்  நற்குண வதிநிதம்
     பற்றறு நிலையினி      லுழல்வாளோ !
வெட்கமு மணிசெய அத்தனை உரிமையில் 
     மெத்தையி லணைபவ     ளுயிராக !
வித்தகி யவளது முத்திரை வழிதனில் 
     வெற்றியில் மகிழுவ      ளழகாக !
மொட்டவிழ் முகையினை முட்டிடு வளியென
     முத்திட இனியவள்      வருவாளே !
முத்தமி ழமுதினை நித்தமும் பொழிபவள் 
     முக்கனி ரசமது      தருவாளே !!

சியாமளா ராஜசேகர் 











No comments:

Post a Comment