Thursday, June 20, 2019

சொல்லிடுவாய் ...!!!

கொவ்வையாய்ச் சிவந்தவான் பார்த்துக்
***கொண்டலே! உன்னிடம் கேட்பேன் !
ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி 
***உனக்கெனக் காத்திருந் தேனே !
அவ்விடம் வந்துசென் றாயாம்
***அறிந்தவர் மகிழ்வுடன் சொன்னார் !
இவ்விடம் வருவதெப் போதாம் 
***இக்கணம் சொல்லிடு வாயே !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment