Thursday, July 11, 2019

செந்தூரின் கடலலைகள் ...!!!


எண்சீர்ச் சந்தவிருத்தம் ...!!!

செந்தூரின் கடலலைகள் கவினழகாய்ப் பாடும் 
     தென்றலுடன் விளையாடிக் கரைமுட்டிப் போகும் !
மந்திரத்தை ஓயாமல் ஒலித்தபடி ஆடும் 
     வண்ணமயில் தானாடக் கண்டவுடன் பூக்கும் !
கந்தனவன் எழிலுருவைக் காணவரம் கேட்கும் 
     கரையோரம் அன்புடனே நுரைமலரைத் தூவும் !
வந்தோரை வரவேற்கப் பொங்கியெழும் நித்தம் 
     மகிழ்ச்சியொடு கால்வருடித் தணிவிக்கும் பித்தம் !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment