Saturday, July 13, 2019

சிந்திப்பாய் மானிடா ...!!!

கானழித்து வானளாவக் கட்டடங்கள் கட்டினாய் 
    கழிவுகளால் நதிநீரை மிகவசுத்த மாக்கினாய்!
ஆனமட்டும் நெகிழியினால் மண்ணைமல டாக்கினாய் 
     ஆறுகளில் மணல்திருடி அதன்தடத்தை மாற்றினாய் !
வான்பொய்த்தால் குடிப்பதற்கும் நீரின்றிப் போகுமே 
     வளங்குன்றி வறட்சியினால் பல்லுயிர்கள் சாகுமே !
ஏனென்ற காரணத்தைச் சிந்திப்பாய் மானிடா 
     இயற்கையினைச் சிதைத்துவிட்டால் இந்நிலைமை தானடா ...!!!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment