Tuesday, July 16, 2019

மழை .... மழை .... மழை ...!!!

வெட்டியது மின்னல்! வெடிமுழக்க மிட்டதிடி!
கொட்டியது வானம்! குளிர்ந்தது - சட்டெனப்
பூமி! உயிர்நனைந்த பூரிப்பி லாடுமுளம்
சாமி விழிதிறந்த தால்.

மேக மிருண்டது மின்ன லொளிர்ந்தது
தோகை விரித்தது தோரணமாய்! - வேகமாய்
மண்ணில் பொழிந்த மழையால் அகங்குளிர்ந்து
கண்கள் பனித்தன காண்.


சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment