Thursday, July 4, 2019

தாய்மனம்...!!!


தாய்மனம் ...!!!
*********************
கண்ணேநீ மண்ணில் வந்த நேரம் ! - என்றன்//
நெஞ்சில் இல்லை பாரம் ! //
கண்ணேநீ மண்ணில் வந்த நேரம் ! - என்றன்//
நெஞ்சில் இல்லை பாரம் ! // -நான்
விண்ணில் மிதந்தேன் வண்ணம் கொண்டேன் -வான- வில்லாய் //- நான்
விண்ணில் மிதந்தேன் வண்ணம் கொண்டேன் -வான
வில்லாய்ப் பூத்தேன் பூத்தேன் //- என்றன்
கண்ணேநீ மண்ணில் வந்த நேரம் ! - என்றன்//
நெஞ்சில் இல்லை பாரம் ! //
பின்னாலே பழித்தவர் எல்லாம் //
பெண்ணுன்னை வாழ்த்திட வந்தார் //
பின்னாலே பழித்தவர் எல்லாம் //
பெண்ணுன்னை வாழ்த்திட வந்தார் // - அன்று
சொன்னதெல்லாம் இதயத்தில் மோதிடுதே -என் //
மண்டைக்குள் ஆயிரம் ஓடிடுதே // - நான்
விண்ணில் மிதந்தேன் வண்ணம் கொண்டேன் -வான- வில்லாய் //- நான்
விண்ணில் மிதந்தேன் வண்ணம் கொண்டேன் -வான
வில்லாய்ப் பூத்தேன் பூத்தேன் //- என்றன்
கண்ணேநீ மண்ணில் வந்த நேரம் ! - என்றன்//
நெஞ்சில் இல்லை பாரம் ! //
வான்மழையாய் வளம்தர வந்தாய் //
வாழ்வினிலே புதுசுகம் தந்தாய் //
வான்மழையாய் வளம்தர வந்தாய் //
வாழ்வினிலே புதுசுகம் தந்தாய் //- என்றும்
தேன்தமிழை அன்புடன் ஊட்டிடுவேன் // - என்
தேவதையை ஆளாக்கிக் காட்டிடுவேன் // - நான்
விண்ணில் மிதந்தேன் வண்ணம் கொண்டேன் -வான- வில்லாய் //- நான்
விண்ணில் மிதந்தேன் வண்ணம் கொண்டேன் -வான
வில்லாய்ப் பூத்தேன் பூத்தேன் //- என்றன்
கண்ணேநீ மண்ணில் வந்த நேரம் ! - என்றன்//
நெஞ்சில் இல்லை பாரம் ! //
( நிலாமுற்றத்தின் ஆண்டுவிழா பாடல் போட்டி - 2019-ல் தேர்வு பெற்ற பாடல் )
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment