ஒற்றிலா அறுசீர் வண்ணவிருத்தம்
*************************************************************
தனன தான தனன தான
தனன தனதனா
அலைக ளோடு கமல மாட
அழகு மிளிருதே!
நிலவு வானி லுலவு வேளை
நினைவு குளிருதே !
மலையை மோதி முகிலு மோட
மனமு மகிழுதே !
தலைவ னோடு தலைவி யோடு
தனிமை விலகுதே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment