எழுசீர்ச் சந்தவிருத்தம்
******************************************
தான தான தான தான தான தான தானனா
எங்கி ருந்த போது முன்னை
இங்கி ருந்து பாடுவேன் !
செங்க ரும்பு வார்த்தை யோடு
சிந்து மன்பி லாடுவேன் !
கங்கை வெள்ள மாய்ப்பு ரண்டு
காத லோடு தேடுவேன் !
திங்க ளோடு வான்ம லர்ந்து
தென்ற லேறி யோடுவேன் !!
No comments:
Post a Comment