Monday, March 6, 2017

மெட்டுக்குப் பாட்டு ! (கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை ....என்ற மெட்டு )

பொன்னம்மா .... பொன்னம்மா ....
புவியில் தேவதை ....
ஏனம்மா ஏனம்மா 
இதழில் புன்னகை 

அன்பில் நெகிழ்ந்திருக்கும் 
நெஞ்சிலுன் 
பிம்பமே ....
என்றும் பெருக்கெடுக்கும் 
கங்கையின் வெள்ளமே ........

இதம் சேர்க்கும் 
இளங் காற்றின்
இசை நீயே தான் !

பொன்னம்மா .... பொன்னம்மா ....
புவியில் தேவதை ....
ஏனம்மா ஏனம்மா 
இதழில் புன்னகை 

சின்னச்சின்ன முத்துபோல 
பால்முகத்தில் வெண்துளி 
கன்னக்குழி தாவியோடும் 
ஆனந்தத்தில் கண்துளி 

தேன்நிலா உன் மேனியின்
பேரழகில் சொக்குதே 
வான்முகில்  நீ பேசிட 
வாய்ப்பார்த்து நிற்குதே 

பொன்னம்மா ..... பொன்னம்மா ....
என்னம்மா ....
உன்னைக் கண்கள் தேடுதம்மா 

பொன்னம்மா .... பொன்னம்மா ....
புவியில் தேவதை ....
ஏனம்மா ஏனம்மா 
இதழில் புன்னகை 

கால்வருடி முத்தம்கொஞ்ச 
பாய்ந்துவரும் வெள்ளலை
மேல்நனைத்து மெய்சிலிர்க்கப்
பாடிவரும் பூமழை 

மாங்குயில் உன் வார்த்தையில் 
மெய்மறந்து போகுமே 
பாங்குடன் உன் பார்வையில் 
பைங்கிளியும் பேசுமே 

பொன்னம்மா ....பொன்னம்மா ....
செல்லம்மா .....
உன்னில் மின்னல் வெட்டுதம்மா 

பொன்னம்மா .... பொன்னம்மா ....
புவியில் தேவதை ....
ஏனம்மா ஏனம்மா 
இதழில் புன்னகை 

அன்பில் நெகிழ்ந்திருக்கும் 
நெஞ்சிலுன் 
பிம்பமே ....
என்றும் பெருக்கெடுக்கும் 
கங்கையின் வெள்ளமே ........

இதம் சேர்க்கும் 
இளங் காற்றின்
இசை நீயே தான் !

சியாமளா ராஜசேகர் 

1 comment: