Saturday, March 4, 2017

அந்தியிலே வானம் ...!!!


அந்திவானம் செம்மஞ்சள் அழகியாகத் தோன்றும்!
செந்தூரப் பொட்டாகச் செங்கதிரும் மின்னும்!
சந்திரனும் மெதுவாகத் தன்வரவைச் சொல்லும்!

பந்தலிலே விண்மீன்கள் பாங்காகப் பூக்கும்!

விந்தைமிகு அழகினையே விழிவிரிய நோக்கும் !
சிந்தையிலே குறுங்கவிதை தேனாறாய்ப் பாயும் !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment