Thursday, March 16, 2017

கூடி வாழ்வோம் சேர்ந்து ....!!

உறவுடனே ஒட்டாமல் ஒதுங்கி வாழ்ந்தால்
***உள்ளத்தில் அன்பிற்கு மிடமே யில்லை!
மறவாமல் சொந்தமுடன் கூடி வாழ்ந்தால்

***மனக்கவலை இருந்தவிடம் மறைந்தே போகும்!
அறவழியைக் கற்பித்துப் பாதை காட்டும்
***அறிவொளியை ஏற்றிவைத்தே இருளைப் போக்கும்!
சிறப்பாக வழிகாட்டும் பிழைகள் சுட்டிச்
***சிரத்தையுடன் உறவோடு வாழ்வோம் சேர்ந்தே!

No comments:

Post a Comment